TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இன்டர்நெட் மூலம் காதலித்து திருமணம்: மகளை கடத்திய பெற்றோர்

Go down

இன்டர்நெட் மூலம் காதலித்து திருமணம்: மகளை கடத்திய பெற்றோர் Empty இன்டர்நெட் மூலம் காதலித்து திருமணம்: மகளை கடத்திய பெற்றோர்

Post by Yelarai Mon Feb 14, 2011 8:33 pm


இன்டர்நெட் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை, சின்னமனூரிலிருந்து பெற்றோர் கடத்தி சென்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் செல்ல கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர், கணபதியப்பன் மகன் ஜெயராம்(28). இவர், சின்னமனூரில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சீர்காழியை சேர்ந்த கலைச்செல்வன் மகள் சரண்யா(23). இவர், அங்குள்ள கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். ஜெயராமிற்கும் சரண்யாவிற்கும் இன்டர்நெட்டில் காதல் மலர்ந்தது. ஒன்றரை ஆண்டுகளாக இன்டர்நெட் மூலமாகவே காதலித்தனர். கடந்த 6ம் தேதி மதுரையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்து போலீசார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், சரண்யா தனது பெற்றோரிடம் காதலன் தான் முக்கியம் என எழுதிக் கொடுத்துவிட்டு, சின்னமனூரில் ஜெயராம் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். நேற்று சரண்யாவின் பெற்றோர் கலைசெல்வன், சுமதி, மாமாக்கள் செந்தில்குமார், அருள்நாதன், அத்தை அனிதா ஆகியோர், சரண்யாவை கட்டாயப்படுத்தி, அடித்து கடத்தி சென்றதாக ஜெயராம் சின்னமனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சரண்யாவை தேடி வருகின்றனர்.

நன்றி: தினமலர்

Yelarai

Posts : 9
Join date : 2011-01-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum